இலங்கை மக்களுக்கு கிடைக்க போகும் விசேட சலுகை

சதொச நிறுவனத்தின் ஊடாக ஒரு பெரிய தேங்காய் அதிகபட்ச விலையாக 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று முதல் இந்த சலுகை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒரே நேரத்தில் 5 தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.